டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"கும்கிக்கு அடுத்ததாக, வளைகுடா வாழ் தமிழர்களை மையமாக வைத்து, ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார், பிரபு சாலமன். இந்த படத்தில், கவுதம் கார்த்திக் தான், ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, கவுதமும், பிரபு சாலமனும், பேசியதாகவும், செய்திகள் வெளியாகின.ஆனால், அந்த படத்திலிருந்து, கவுதமை, பிரபு சாலமன் கழற்றி விட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. இப்போது, இந்த படத்தில், நான்ஈ படத்தில் நடித்த, நானி, ஹீரோவாக நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. தன் படத்தில் நடிக்கும் ஹீரோ, தமிழ், தெலுங்கு, என, இரு மொழி ரசிகர்களுக்கும், நன்றாக அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதால், நானியை தேர்வு செய்துள்ளாராம், பிரபு சாலமன். தன், முந்தைய படங்களில், கேரளாவைச் சேர்ந்த, அமலா பால், லட்சுமி மேனன் ஆகியோரை நடிக்க வைத்த, பிரபு சாலமன், இந்த படத்திலும், கேரளாவைச் சேர்ந்த, ஒரு புதுமுகத்தை தான், அறிமுகப்படுத்தப் போகிறாராம்.