ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"கும்கிக்கு அடுத்ததாக, வளைகுடா வாழ் தமிழர்களை மையமாக வைத்து, ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார், பிரபு சாலமன். இந்த படத்தில், கவுதம் கார்த்திக் தான், ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, கவுதமும், பிரபு சாலமனும், பேசியதாகவும், செய்திகள் வெளியாகின.ஆனால், அந்த படத்திலிருந்து, கவுதமை, பிரபு சாலமன் கழற்றி விட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. இப்போது, இந்த படத்தில், நான்ஈ படத்தில் நடித்த, நானி, ஹீரோவாக நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. தன் படத்தில் நடிக்கும் ஹீரோ, தமிழ், தெலுங்கு, என, இரு மொழி ரசிகர்களுக்கும், நன்றாக அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதால், நானியை தேர்வு செய்துள்ளாராம், பிரபு சாலமன். தன், முந்தைய படங்களில், கேரளாவைச் சேர்ந்த, அமலா பால், லட்சுமி மேனன் ஆகியோரை நடிக்க வைத்த, பிரபு சாலமன், இந்த படத்திலும், கேரளாவைச் சேர்ந்த, ஒரு புதுமுகத்தை தான், அறிமுகப்படுத்தப் போகிறாராம்.