'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"கும்கிக்கு அடுத்ததாக, வளைகுடா வாழ் தமிழர்களை மையமாக வைத்து, ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார், பிரபு சாலமன். இந்த படத்தில், கவுதம் கார்த்திக் தான், ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, கவுதமும், பிரபு சாலமனும், பேசியதாகவும், செய்திகள் வெளியாகின.ஆனால், அந்த படத்திலிருந்து, கவுதமை, பிரபு சாலமன் கழற்றி விட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. இப்போது, இந்த படத்தில், நான்ஈ படத்தில் நடித்த, நானி, ஹீரோவாக நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. தன் படத்தில் நடிக்கும் ஹீரோ, தமிழ், தெலுங்கு, என, இரு மொழி ரசிகர்களுக்கும், நன்றாக அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதால், நானியை தேர்வு செய்துள்ளாராம், பிரபு சாலமன். தன், முந்தைய படங்களில், கேரளாவைச் சேர்ந்த, அமலா பால், லட்சுமி மேனன் ஆகியோரை நடிக்க வைத்த, பிரபு சாலமன், இந்த படத்திலும், கேரளாவைச் சேர்ந்த, ஒரு புதுமுகத்தை தான், அறிமுகப்படுத்தப் போகிறாராம்.