தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் சித்தார்த்-சமந்தா இருவரும் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து ராகு-கேது பரிகார பூஜைகளிலும் பங்கேற்றனர். அதேபோல் பிரபுதேவாவும் அதே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, ராகு-கேது பரிகார பூஜையிலும் பங்கேற்றுள்ளார். அதையடுத்து, காளஹாஸ்தீசுவரர், அம்பாள், தட்சணாமூர்த்தி சன்னதிகளில் தரிசனம் செய்த அவருக்கு பண்டிதர்கள் வேதமந்திரங்கள் ஓதி ஆசி வழங்கியுள்ளனர்.
இதையடுத்து பிரபுதேவா அளித்த பேட்டியில், நான் சிவபெருமானின் தீவிரமான பக்தன். ஒவ்வொரு திரைப்படத்தையும் முடித்ததும் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் என் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது. அதனால் தவறாமல் வந்து செல்கிறேன். மேலும், தற்போது நான் தெலுங்கில் ராமைய்யா வாஸ்த வைய்யா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். அப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அதனால் அப்படம் வெற்றி பெற வேண்டியும் சாமி தரிசனம் செய்ய வந்தேன் என்று கூறியுள்ளார்.