தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
ஷூட்டிங் ஸ்பாட்டில் வெட்டியாக அரட்டை அடிக்கும் திரைநட்சத்திரங்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது ஒரு புதிய நடைமுறை. பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளார் இயக்குனராக அவதரித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். இவர் இயக்கும் முதல்படம் யான். ஜீவா ஹீரோவாகவும், துளசி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் ப்ளஸ் ரொமாண்டிக் கலந்த கதையாக இப்படத்தை இயக்கி வருகிறார் ரவி கே.சந்திரன். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஹாரிஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நம்மூரில் பிறந்து வடமாநிலம் வரை தனது ஒளிப்பதிவால் அசத்தியவர் ரவி கே.சந்திரன். அவர் இயக்கும் முதல்படமான யான்-ஐ எங்கள் நிறுவனம் தயாரிப்பது எங்களுக்கு பெருமை என்றார். மேலும் பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை ரவி கே சந்திரன் கொண்டு வந்துள்ளார். உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம். ஹாலிவுட் படமான ஸ்கைபால் படத்தை வெறும் 40 நாட்களில் முடிக்கிறார்கள், ஆனால் தமிழ்படங்கள் கிட்டத்தட்ட 80நாள்-90நாள், ஓராண்டு, இரண்டாண்டு என்று இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். ரவி கே.சந்திரன் கொண்டுவந்துள்ள இந்த முயற்சியால், படத்தின் பாதி செலவு குறைந்து இருப்பதாகவும், இந்த சிஸ்டத்தை எனது பட தயாரிப்புகளில் மட்டுமல்லாது எல்லா தயாரிப்பாளர்களும் இதை பின்பற்ற சொல்லி வலியுறுத்தியும் வருகிறேன் என்றார்.
பர்ஸ்ட் எடிட் சிஸ்டம்; அப்படின்னா என்ன...? ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் 20-25 பேர் கையில் வாக்கி டாக்கியுடன் உலா வருவார்கள். எப்பேர்பட்ட ஹீரோ, ஹீரோயின் என்றாலும் இவர்களிடம் சொல்லிவிட்டு தான் எங்கும் போக வேண்டும், ஏன் டாய்லெட் போக வேண்டும் என்றால் கூட இவர்களிடம் சொல்லிவிட்டு தான் போகணும், இவ்வளவு மணிநேரத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் ஷாட்டுக்கு ரெடியாகிவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க எப்போதும் ஆள் போட்டிருப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் ஹீரோ, ஹீரோயின்கள் ஹாயாக உட்கார்ந்து பேச முடியாது, அரட்டை அடிக்க முடியாது. கேரவனில் போய் ரொம்பநேரம் ஓய்வெடுக்க முடியாது. இதுபோன்று கண்காணிப்பதால் சொன்ன தேதிக்கு முன்பாக படத்தை வேகமாக எடுத்து முடித்து விடலாம், அதேப்போல் படத்தின் செலவும் பாதியளவு குறைக்கப்படும்.
வரவேற்கத்தக்க விஷயம் தான்...!!