டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இரண்டாவது இன்னிங்சில் ஆடிக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு தற்போது தமிழில்தான் பெரிய படங்கள் உள்ளன என்றால், மலையாளத்தில் மம்மூட்டியுடனும், தெலுங்கில் நாகார்ஜூனாவுடனும் தலா ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் எல்லாம் அவருக்கும் கதையில் முக்கிய பங்கு உள்ளதாம். முன்பெல்லாம் நயன்தாரா என்றாலே கவர்ச்சிக்கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து வந்த சினிமா உலகம், இப்போது அவரை பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம் நயன்தாரா நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற படம் கொடுத்த பெயர்தான். அதனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தரமான கேரக்டர்களாக பார்த்து செலக்ட் பண்ணி வருகிறார் நயன்.
மேலும், காஜல்அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் போன்று இப்போதும் நயன்தாராவுக்கு பீல்டில் மவுசு இருக்கிறது. அதனால் அவரது படக்கூலியும் ஒரு கோடிக்கு மேல் எகிறி நிற்கிறது. மலையாளத்தில் இது சாத்தியமில்லை என்றாலும், அவருக்கு தமிழ், தெலுங்கில் இருக்கிற மார்க்கெட்டை புரிந்து கொண்டு அங்கு தரும் சம்பளத்தில் அதிகப்படியாகவே கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தனக்கு தமிழைப்போலவே மற்ற மொழிகளிலும் இருக்கிற வரவேற்பை பார்த்த நயன்தாரா, முன்னணி நடிகர், இயக்குனர்களின் படங்களுக்கு கூடுதல் முக்கியத்தும் கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.