ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உயிர், மிருகம்,சிந்துசமவெளி போன்ற காமம் சம்பந்தப்பட்ட படங்களை இயக்கியவர் சாமி. இதில் சிந்துசமவெளி படத்தில் மாமனார், மருமகளின் கள்ள உறவைப்பற்றி அவர் படமெடுத்ததற்கு பெருவாரியான பொதுமக்களும், பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு அவர் வீட்டில் கல், சோடா பாட்டிலை வீசி பலரும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அதன்காரணமாக, அந்த படமும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு தியேட்டர்களில இருந்தே வெளியேற்றப்பட்டது.
அதனால் அடுத்தபடியாக சாமிக்கு யாரும் படம் கொடுக்கவே முன்வரவில்லை. அதையடுத்து தான் இயக்கி ஏற்கனவே கிடப்பில் போட்டிருந்த சரித்திரம் படத்தை மீண்டும் எடுக்கப்போவதாக சொன்னார். ஆனால் அந்த படத்தின் நாயகிக்கு திருமணமாகி விட்டது. அதனால் இனிமேல் அப்படம் சாத்தியப்படாது என்கிற நிலையாகி விட்டது.
அதனால் இப்போது தனது பாணியில் இருந்து முற்றிலுமாக மாறி படமெடுக்க முடிவு செய்திருக்கிறார் சாமி. அதாவது இனி ஆபாசத்தையே எனது படங்களில் பார்க்க முடியாது. முற்றிலும் குடும்ப பாங்கான படமெடுக்கப்போகிறேன் என்று கூறும் அவர், கங்காரு என்றொரு படத்திற்கான கதையை ரெடி பண்ணி விட்டு அடுத்தக்கட்ட வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார். அதோடு, சிந்து சமவெளியில் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக ரசிகர்கள், கங்காரு படத்திற்கு பிறகு என்னை கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.