விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
அம்முவாகிய நான் என்ற படத்தை இயக்கியவர் பத்மாமகன். அதையடுத்து ஒரு நல்ல படததை இயக்க வேண்டும் என்று ஒரு ஏழு வயது சிறுவனை ஹீரோவாக வைத்து ஒரு கதை பண்ணி விட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியிருக்கிறார். ஆனால் ஏழு வயது பையன் ஹீரோ என்றால் எப்படி படத்தை விற்க முடியும் என்று யாரும் படத்தை தயாரிக்க முன்வரவில்லையாம்.
இதனால் ஏற்பட்ட வெறுப்பில், பல ஆண்டுகளாக வீடே கதியென்று கிடந்தாராம் பத்மாமகன். இருப்பினும் எப்படியேனும் படம் இயக்கியே தீரவேண்டும் என்ற வெறி ஏற்பட, தனது மனைவியின் கம்மலை அடகு வைத்து வெறும் 10 ஆயிரத்தை கையில் வைத்துக்கொண்டு கூத்து என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்திருக்கிறார். நல்ல படம் ஓடாது என்று பலரும சொன்னதால், கூத்தடிப்போம் என்று தானும் களமிறங்கியதாக சொல்லும் அவர், இப்போது விமல், பிரசன்னா, அருந்ததி, நந்தகியை வைத்து அந்த படத்தை தயாரித்து இயக்கி விட்டார்.
ஆனால் கூத்து என்ற டைட்டீலை வேறொருவர் தான் பதிவு செய்து வைத்திருப்பதாக சொல்ல, அந்த தலைப்பை இப்போது நேற்று இன்று என மாற்றி விட்டார். மேலும், இன்றைய தருவாயில் படத்தை ஓட வைப்பது சாதாரண விசயமல்ல என்கிற காரணத்தாலேயே, படத்தில் நாயகியாக நடிக்கும அருந்ததியை அதிரடி கவர்ச்சி நடிகையாக இறக்கி விட்டிருக்கிறார். காட்டுப்பகுதியில் தன்னைச் சுற்றியிருக்கும் 6 இளவட்ட பையன்களுடன் நடித்துள்ள அருந்ததி, தான் குளிக்க, அதை அவர்கள் சுற்றி நின்று ரசிப்பது போன்ற கிளுகிளுப்பான காட்சியிலும் நடித்துள்ளார். ஆக, தனது கதைக்காக இல்லேன்னாலும், அருந்ததியின் கவர்ச்சிகாகவாவது படம் ஓடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பத்மாமகன்.