டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாற்றத்தை பற்றி பேசுபவராக இருக்க வேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தெரிவித்துள்ளார். சமூக மாற்றத்திற்காக ஐயம் ஃபார் இந்தியா (இந்தியாவுக்காக நான்) என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார் லதா ரஜினிகாந்த். நமது நாட்டிற்காகவும், இளைஞர்களுக்காகவும் களம் இறங்கி இருக்கிறார். இதற்கான விழா கடந்த இருதினங்களாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் நமது பாரம்பரியம், தொன்மை, இசை, நடனம், வணிகம், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் அரங்கேற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்து இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை லதா ரஜினிகாந்த், மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டே இருப்பவராக இல்லாமல், மாற்றத்தை உருவாக்குபராக இருப்போம் என்ற கொள்கையில் அதிக நம்பிக்கை உடையவள் நான். பொதுவாழ்க்கையில் இருந்து கொண்டு பலதரப்பட்ட மக்களுடன் உரையாடுவதையே கடமையாக கொண்ட எனக்கு கல்வி, ஆரோக்கியம், உடல்நலம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும், அதுவும் நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த உயரிய வாழ்க்கை முறையை திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்ற தாகம் உள்ளது. அதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறேன் என்றார்.