இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ஒரே நாளில், கோச்சடையான் படத்தின் பாதி டப்பிங்கை முடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டார் நடிகர் ரஜினி. எந்திரன் படத்துக்கு பிறகு ராணாவில் நடிக்க இருந்த ரஜினி, அதன்பின் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறு ஜென்மம் எடுத்து திரும்பினார். சில மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு தனது மகள் செளந்தர்யா இயக்கும் 3டி படமான கோச்சடையானில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெரப், நாசர், ஆதி, ருக்மணி, ஷோபனா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது சிறப்பு சத்தங்கள், டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி செய்து வருகிறார். படத்துக்கான டப்பிங்கை ரஜினியே பேசினார். ஒரே நாளில் அதாவது வெறும் 7மணி நேரத்தில் கிட்டத்தட்ட பாதி படத்துக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டார். இதை பார்த்த படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியத்தில் திகைத்து போயினர். இந்த வயதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் அவர் டப்பிங் பேசியதை சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட அனைவரும் அவரை பாராட்டினர்.