ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரே நாளில், கோச்சடையான் படத்தின் பாதி டப்பிங்கை முடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டார் நடிகர் ரஜினி. எந்திரன் படத்துக்கு பிறகு ராணாவில் நடிக்க இருந்த ரஜினி, அதன்பின் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறு ஜென்மம் எடுத்து திரும்பினார். சில மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு தனது மகள் செளந்தர்யா இயக்கும் 3டி படமான கோச்சடையானில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெரப், நாசர், ஆதி, ருக்மணி, ஷோபனா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது சிறப்பு சத்தங்கள், டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி செய்து வருகிறார். படத்துக்கான டப்பிங்கை ரஜினியே பேசினார். ஒரே நாளில் அதாவது வெறும் 7மணி நேரத்தில் கிட்டத்தட்ட பாதி படத்துக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டார். இதை பார்த்த படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியத்தில் திகைத்து போயினர். இந்த வயதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் அவர் டப்பிங் பேசியதை சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட அனைவரும் அவரை பாராட்டினர்.