இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிக்பாஸ் டி.வி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது பாலிவுட் நடிகர் சல்மான்கானின் நட்பை சம்பாதித்தார் சிலம்பாட்டம் பட நாயகியான சனாகான். அப்போது அவரிடத்தில் இந்தி சினிமாவில் தான் சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல், தலையாட்டிய சல்மான்கான், அதையடுத்து தான் கமிட்டான மென்ட்டல் என்ற படத்துக்கு ஒரு ஹீரோயினி தேவைப்பட்டதும் சனாகானுக்கு சிபாரிசு செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதனால் இந்தியில் முதல்படமே சல்மான்கானுடன் நடிப்பதால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருந்து வருகிறார் சனாகான்.
அதேசமயம். அப்படத்தில் நடிக்கும் டெய்சியை முதன்மை நாயகியாக்கி விட்டு, தன்னை இரண்டாவது நாயகியாக பின்தள்ளிவிட்டது மனதளவில் சனாகானுக்கு குறையை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் என்ட்ரியே இப்படி இருப்பதால் அடுத்தடுத்து தன்னை செகண்ட் ஹீரோயினிக்கே மற்றவர்களும் அழைக்கக்கூடாதே என்று, டெய்சியை பின்தள்ளிவிட்டு அவர் இடத்தை தான் கைப்பற்றும் சீக்ரெட் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறாராம். இதுபற்றி சல்மானிடம் சொல்ல நினைத்த சனாகான், அவருக்கு ஒரு மிகப்பெரிய பார்ட்டி வைத்து சந்தடி சாக்கில் தனது மனதில் உள்ளதை போட்டு உடைத்திருக்கிறார். அதற்கு, ஆவன செய்வதாக சொல்லியிருக்கிறாராம் சல்மான். இருப்பினும் சனாகானின் முயற்சிக்கு இன்னமும் பலன் கிடைக்கவில்லையாம். சல்மான்கான் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.