டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமா இப்போது வேறு ஒரு களத்தில் பயணிக்கிறது என்றே சொல்லலாம்.
வித்தியாசமான புதிய முயற்சி, இயக்குனர்களின் மாறுபட்ட கதை களங்கள், ரசிகர்களின் ரசிப்பு தன்மையை சரியாக புரிந்து கொண்டு கதை சொல்ல காத்திருக்கின்றனர் பல இயக்குனர்கள். சமீபத்தில் தமிழில் வெளி வந்த வெற்றி படங்கள் இதற்கு மிக பெரிய உதாரணமாகும். அந்த வரிசையில் இப்போது இயக்குனர் பி.வாசு மகன் சக்தியை வைத்து படம் பேசும் என்ற படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் ராகவன். இந்த படம் பற்றி ராகவனிடம் கேட்டபோது, இது வரை நான் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 5 படங்கள் இயக்கி இருக்கிறேன் இந்த படம் எனக்கு 6 வது படம். பொதுவாக என் படங்களில் ஏதாவது ஒரு புதிய முயற்சியை தொட்டிருப்பேன், அந்த வகையில் படம் பேசும் படத்தில்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அவர்களின் இரண்டாம் குணாதிசயங்களை
வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளேன், சக்தி பூர்ணா, சித்தாரா, சீதா, ஷாயாஜி போன்ற பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் பார்த்த சக்தியை வேறு ஒரு கலர் கொடுத்து இயக்கி உள்ளேன், பொதுவாக ஒரு படத்தை ஸ்கிரிப்ட் தான் எடுத்து செல்லும், ஆனால் இந்த படம் பேசும் படத்தில் அந்த கேரக்டர்களை வைத்து கதை சொல்லியிருக்கேன், இதற்கு முன் தமிழில் இருவர்
மட்டுமே நடித்த பை 2 படத்தை இயக்கி இருந்தேன்,எந்த மொழி இயக்குனராக
இருந்தாலும் தமிழில் ஒரு பெரும் வெற்றி படத்தை கொடுக்கவே விரும்புவர்.
நானும் அப்படிதான் கடந்த 7 மாதமாக இந்த படத்தோடு பயணிக்கிறேன்,நிச்சயம்
ரசிகர்கள் படத்தை ரசித்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எங்க டீமில் அனைவருக்கும் உண்டு, ரொம்ப நம்பிக்கையோடு வேலை செய்துள்ளோம்,சக்திக்கு படம் பேசும் படம் பேசப் படும் படமாக இருக்கும் , அடுத்த கட்டத்திற்கு இந்த படம் அவரை அழைத்து செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் இயக்குனர் ராகவன், இவரின் புதிய முயற்சிக்கு நாமும் வாழ்த்துக்களை சொல்வோம்.