ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோடம்பாக்கத்தில் புதிதாக தயாராகி வரும், ஒரு படத்தில், வில்லன், கதாநாயகியை துரத்துவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த பின்னணியில், ஒரு பாடல் இருந்தால், நன்றாக இருக்கும் என, படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்க, அவரும், அதற்கு சம்மதித்துள்ளார். அந்த சூழலில், ஹீரோயின் பாடும் பாடலும், உருக்கமாக இருக்க வேண்டுமென்று, ஸ்ரேயா கோஷலை பாட அழைத்தாராம் இசையமைப்பாளர். ஆனால், இந்தி படங்களில் பிசியாக இருந்த ஸ்ரேயா, "எனக்கு இப்போது தேதி இல்லை. நான் தான், பாட வேண்டும் என்றால், நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை, நீங்கள் காத்திருக்க தயாரா என, கேட்டுள்ளார். ஸ்ரேயா கோஷலை தவிர, வேறு யார் பாடினாலும், அந்த பாடல், தான் விரும்பியபடி இருக்காது என்பதால், இசையமைப்பாளரும், "காத்திருக்க தயார் என, கூறியுள்ளார். இதன்பின், நான்கு மாதங்கள் கழித்து, அந்த பாடலை பாடிக் கொடுத்தாராம், ஸ்ரேயா.