டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோடம்பாக்கத்தில் புதிதாக தயாராகி வரும், ஒரு படத்தில், வில்லன், கதாநாயகியை துரத்துவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த பின்னணியில், ஒரு பாடல் இருந்தால், நன்றாக இருக்கும் என, படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்க, அவரும், அதற்கு சம்மதித்துள்ளார். அந்த சூழலில், ஹீரோயின் பாடும் பாடலும், உருக்கமாக இருக்க வேண்டுமென்று, ஸ்ரேயா கோஷலை பாட அழைத்தாராம் இசையமைப்பாளர். ஆனால், இந்தி படங்களில் பிசியாக இருந்த ஸ்ரேயா, "எனக்கு இப்போது தேதி இல்லை. நான் தான், பாட வேண்டும் என்றால், நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை, நீங்கள் காத்திருக்க தயாரா என, கேட்டுள்ளார். ஸ்ரேயா கோஷலை தவிர, வேறு யார் பாடினாலும், அந்த பாடல், தான் விரும்பியபடி இருக்காது என்பதால், இசையமைப்பாளரும், "காத்திருக்க தயார் என, கூறியுள்ளார். இதன்பின், நான்கு மாதங்கள் கழித்து, அந்த பாடலை பாடிக் கொடுத்தாராம், ஸ்ரேயா.