'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோடம்பாக்கத்தில் புதிதாக தயாராகி வரும், ஒரு படத்தில், வில்லன், கதாநாயகியை துரத்துவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த பின்னணியில், ஒரு பாடல் இருந்தால், நன்றாக இருக்கும் என, படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்க, அவரும், அதற்கு சம்மதித்துள்ளார். அந்த சூழலில், ஹீரோயின் பாடும் பாடலும், உருக்கமாக இருக்க வேண்டுமென்று, ஸ்ரேயா கோஷலை பாட அழைத்தாராம் இசையமைப்பாளர். ஆனால், இந்தி படங்களில் பிசியாக இருந்த ஸ்ரேயா, "எனக்கு இப்போது தேதி இல்லை. நான் தான், பாட வேண்டும் என்றால், நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை, நீங்கள் காத்திருக்க தயாரா என, கேட்டுள்ளார். ஸ்ரேயா கோஷலை தவிர, வேறு யார் பாடினாலும், அந்த பாடல், தான் விரும்பியபடி இருக்காது என்பதால், இசையமைப்பாளரும், "காத்திருக்க தயார் என, கூறியுள்ளார். இதன்பின், நான்கு மாதங்கள் கழித்து, அந்த பாடலை பாடிக் கொடுத்தாராம், ஸ்ரேயா.