ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கோடம்பாக்கத்தில் புதிதாக தயாராகி வரும், ஒரு படத்தில், வில்லன், கதாநாயகியை துரத்துவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த பின்னணியில், ஒரு பாடல் இருந்தால், நன்றாக இருக்கும் என, படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்க, அவரும், அதற்கு சம்மதித்துள்ளார். அந்த சூழலில், ஹீரோயின் பாடும் பாடலும், உருக்கமாக இருக்க வேண்டுமென்று, ஸ்ரேயா கோஷலை பாட அழைத்தாராம் இசையமைப்பாளர். ஆனால், இந்தி படங்களில் பிசியாக இருந்த ஸ்ரேயா, "எனக்கு இப்போது தேதி இல்லை. நான் தான், பாட வேண்டும் என்றால், நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை, நீங்கள் காத்திருக்க தயாரா என, கேட்டுள்ளார். ஸ்ரேயா கோஷலை தவிர, வேறு யார் பாடினாலும், அந்த பாடல், தான் விரும்பியபடி இருக்காது என்பதால், இசையமைப்பாளரும், "காத்திருக்க தயார் என, கூறியுள்ளார். இதன்பின், நான்கு மாதங்கள் கழித்து, அந்த பாடலை பாடிக் கொடுத்தாராம், ஸ்ரேயா.