ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாணா காத்தாடியில் நடிகரான அதர்வா, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தையடுத்து பாலாவின் பரதேசிக்கு பிறகு பட்டை தீட்டப்பட்ட நடிகராகியிருக்கிறார். பரதேசியில் அவர் நடித்து முடித்த நேரத்தில் சில இயககுனர்கள் அதர்வாவை தங்கள் படங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் பரதேசிக்கு பின்தான் புதிய படங்களுக்கான கதை கேட்கும் முடிவில் இருக்கிறேன் என்று தவிர்த்து வந்தார். அதோடு, இதுவரை நீங்கள் என்னை பார்த்தது வேற, பரதேசியில் பார்க்கப்போறது வேற. அந்த படத்தைப்பார்த்தபிறகு என்னை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். அதனால்தான் அப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு கதை கேட்பதாக சொல்கிறேன் என்று கூறிவந்தார்.
ஆக, இப்போது பரதேசி வெளியாகி, அதர்வாவுக்கு ஒரு இடத்தை பிடித்துக்கொடுத்து விட்டது. எப்படி நந்தாவுக்கு பிறகு சூர்யா, நான் கடவுளுக்குப்பிறகு ஆர்யா, அவன் இவனுக்குப்பிறகு விஷால் ஆகியோர் ஒரு இடத்தை பிடித்தார்களோ அதேபோல் இப்போது அதர்வாவின் பெயரும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே தன்னிடம் கதை சொல்ல காத்திருந்த இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு வருகிறார் அதர்வா. ஆனால் அப்படி தான் கேட்கும் கதைகளை உடனடியாக ஓ.கே சொல்லாமல், பாலா சாரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு முடிவு சொல்கிறேன் என்கிறாராம். இதுவரை 10 கதைகளுக்கு மேல் கேட்டுவிட்ட அதர்வா, எந்த படத்தில் முதலில் நடிப்பார் என்பது பாலா சொல்லும் பதிலில்தான் இருக்கிறதாம்.