தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எத்தனை நல்ல படமாக இருந்தாலும் சரி, நல்ல கருத்துக்களை சொன்னாலும் சரி படத்தில் குத்துப்பாட்டு இருந்தால் கண்டிப்பாக ஏ சர்ட்டிபிக்கேட் தான் தரப்படும் என்று கேரள சென்சார் போர்ட் முடிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் கவர்ச்சி நடிகைகளை கொண்டு குத்துப்பாட்டுகள் திணிக்கப்படுவதாகவும், அது இளைஞர்கள் மனதை கெடுப்பதாகவும் சமீபத்தில் எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏ சான்றிதழ் பெற்றால் படத்தை தொலைக்காட்சிகளுக்கு விற்க முடியாது. தொலைக்காட்சி உரிமம் மூலம் குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைத்து வந்தது. தணிக்கை குழுவின் இந்த அதிரடி நடிவடிக்கையால் மலையாள திரையுலகினர் அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.