விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இளவட்ட ஹீரோக்களின் ஆக்ஷன் ஆதிக்கத்துக்கு முன்னால் தனது அடிதடி எடுபடாது என்று தனது ரூட்டை மாற்றி வருகிறார் அர்ஜூன். கடல் படத்தில் வில்லனாக நடித்தவர், இப்போது வஸந்த் இயக்கியுள்ள 3 பேர் 3 காதல் படத்தில் மென்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து வித்தியாசமான கேரக்டர் நடிகராகி விடவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது தாய்மொழியான கன்னடத்தில் நடித்த பிரசாத் படத்துக்காக அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததைத் தொடர்ந்து மீண்டும் உற்சாகமடைந்து விட்டார் மனிதர். அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
அது எந்த மாதிரியான படம்? என்று கேட்டால், இதுவரை நான் நடிக்காத மாறுபட்ட கதையம்சம். அதில் ஆக்சனும் உண்டு, அதிரடியும் உண்டு. காதல், காமெடி இப்படி எல்லாமும் கலந்திருக்கும். அதேசமயம் இன்றைய இளவட்ட ரசிகர்கள் விரும்பும் வகையிலான கதையாக இருக்கும். இந்த படத்தை நானே தயாரித்து இயக்கி நடிக்கிறேன் என்று சொல்லும் அர்ஜூன், இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது என்கிறார். இதையடுத்து படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் வேலைகளையும முடுக்கி விட்டுள்ளார்.