இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களின் வெற்றி காரணமாக, விஜய சேதுபதியின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. அதனால் அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் நீண்ட க்யூவில் நிற்கின்றனர். இந்த நிலையில், தற்போது சூதுகவ்வும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அவர். இதையடுத்து, தான் அடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கான படக்கூலியை அவர், ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மாதிரி, விஜயசேதுபதியும் மாறி விட்டாரே என்று படாதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் இதுபற்றி விஜயசேதுபதியைக்கேட்டால், ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்று எந்த தயாரிப்பாளரிடத்திலும் நான் சொன்னதே இல்லை. நான் ஒன்றும் பெரிய ஸ்டார் நடிகன் இல்லை. கதையின் நாயகன். நான் யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால், இப்போதுவரை தயாரிப்பாளர்கள் நிர்ணயிக்கிற சம்பளத்தைதான் வாங்கிக்கொண்டு வருகிறேன். என் படங்கள் வெற்றி பெறுகிறபோது அவர்களாக என்ன சம்பளம் தருகிறார்களோ அதை வாங்கிக்கொள்வேன்.
மேலும், என்னைப்பற்றி தெரியாதவர்கள்தான் இதுபோன்ற செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்கள். ஆனால் என்னை வைத்து படம் பண்ணியவர்களைக்கேட்டால் உண்மை நிலவரம் தெரியும். அதனால் என் வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை வைத்து படம் தயாரித்து வரும் தயாரிப்பார்களிடம் இதுபற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் விஜயசேதுபதி.