தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாணயம் படத்தின் கதையை அதன் டைரக்டர் சிபிராஜிடம் சொன்னபோது, எனக்கு ஹீரோ வேடம் வேண்டாம். வில்லன் வேடமே கொடுங்கள் என்று கேட்டு வாங்கி நடித்தார். ஆனால் அந்த படமும் வழக்கம்போல் சரியாக போகவில்லை. அதனால் அடுத்தபடியாக அவரை வைத்து படம் பண்ண எந்த இயக்குனர்களும் முன்வரவில்லை. இதையடுத்து சொந்தபடம் எடுத்து நடிக்கலாம் என்று எண்ணியிருந்தார். அதன்படி இப்போது சொந்தபடம் எடுக்க உள்ளார் சிபி. அதையடுத்து சில பிரபல டைரக்டர்களுக்கு தன்னை வைத்து படம் இயக்க அழைப்பு விடுத்தார் சிபிராஜ். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி இயக்குனர்கள் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வரவில்லையாம். அதனால் இப்போது புதுமுக டைரக்டர்களாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்து, சிலரிடம் கதை கேட்டுள்ளார். தான் மட்டும் அமர்ந்து கதை கேட்டால் சரியாக முடிவெடுக்க முடியாது என்று தனது அம்மாவையும் உடன் உட்கார வைத்து கதை கேட்டிருக்கும் சிபிராஜ். அந்த கதைகளை தற்போது பரிசீலணை செய்து வருகிறார். வருகிற ஜூன் மாதத்தில் தனது சொந்த கம்பெனி மூலம் அப்படத்தை தயாரிக்கிறாராம்.