டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறை தண்டனை பெற்றிருக்கும் சஞ்சய் தத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு இந்து மகா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் வீர்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை குண்டு வெடிப்பில் 257 அப்பாவி மக்களின் படுகொலைக்கு காரணமான பயங்கரவாத சதி செயலுக்கு துணை போன நடிகர் சஞ்சய்தத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தால் சுப்ரீம் கோர்ட் அவரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. அப்படியிருக்கையில் பிரபல நடிகர் என்கிற காரணத்தாலும், நண்பர் என்கிற அபிமானத்தாலும் நடிகர் சஞ்சய்தத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜெயா பச்சன் போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளது கண்டிக்கதக்கது. தண்டனை குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம், என்று கூறப்பட்டுள்ளது.