'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சேது படம், இயக்குனர் பாலாவுக்கு முதல் படம். அதேபோல் நடிகர் விக்ரமுக்கு முதல் வெற்றி படம். அதற்கு முன்பு அவர் பல படங்களில் நடித்திருந்தபோதும் இந்த சேது படம்தான் அவரை வெளிச்சம் போட்டு காட்டியது. அதன்பிறகு அதே பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இப்படி பாலாதான் விக்ரமுக்கு சினிமாவில் புதிய பாதையை காட்டியவர். அந்த வகையில் பாலா எப்போது நடிக்க அழைத்தாலும் தயாராக இருந்து வருகிறார் விக்ரம். ஆனால் அவர்தான், தொடர்ந்து விக்ரமை வைத்து படமெடுத்தால் கதை வேறாக இருந்தாலும் பழைய படங்களை பார்த்ததுபோலவே ரசிகர்கள் உணருவார்கள் என்று வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் பண்ணி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அதர்வாவை நாயகனாக வைத்து பரதேசி படத்தை இயக்கி வெளியிட்டார். வழக்கம்போல் விமர்சகங்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்றாலும், ரசிகர்கள்தான் படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் படத்துக்கான வசூல் ரொம்ப கம்மியாக உள்ளாதாம். இதனால் மனதளவில் சோர்ந்து போயிருக்கிறார் பாலா. ஆனால் பரதேசியைப்பார்த்த சினிமா உலகத்தில் மானாவாரியாக புகழ்ந்து வருகிறார்கள். பாலாவை நேரில் சந்தித்த விக்ரம், படத்தின் ஒவ்வொரு காட்சியைப்பற்றியும் சொல்லி பாலாவை புல்லரிக்க வைத்து விட்டாராம். அந்த அளவுக்கு பரதேசி விக்ரமை பாதித்துள்ளதாம். இதையடுத்து, நீங்கள் எப்போது அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று வழக்கம்போல் தனது வேண்டுகோளை வைத்து விட்டு திரும்பியிருக்கிறார் விக்ரம்.