'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: தீ விபத்தில் சிக்கி, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த, பழம் பெரும் நடிகை சுகுமாரி, சிகிச்சைப் பலனின்றி, மரணமடைந்தார்.
பழம்பெரும் நடிகை சுகுமாரி, 74. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், நாகர்கோவில் இருந்தபோது, 1940ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் தேதி பிறந்தார். சிறு வயதில், திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோருடன், பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டியங்களை பயின்றார். சுகுமாரியின் தாயும், திருவிதாங்கூர் சகோதரிகளின் தாயும், சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின், சகோதரிகளுடன், பல வெளிநாடுகளுக்கு சென்று நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். 10வது வயதில், நடிப்புலகில் கால் பதித்தார். நடிகை சுகுமாரியின் முதல் படம், "பட்டிக்காடா பட்டணமா! ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடத்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனரான, பீம்சிங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக, தி.நகர், நார்த்போக் சாலையில், குடும்பத்துடன் வசித்து, "டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவர் வீட்டில் விளக்கு ஏற்றும் போது, உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில், சுகுமாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து, முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இன்று (26.03.2013) மாலை, 5:30 மணிக்கு, நடிகை சுகுமாரி, சிகிச்சைப் பலனின்றி மரணடைந்தார். இதையடுத்து, அவர் உடல், தி.நகர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு, நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான சுகுமாரியின் மறைவு, திரைப்படத் துறையினருக்கும், கலை துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.