ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் சூர்யா, சிம்பு, விஷால் ஆகியோருக்கு சிக்ஸ்பேக்கில தனி இடம் உண்டு. மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து உடம்பை முறுக்கி திறுக்கி சண்டை காட்சிகளில் ஊடு கட்டி அடித்தார்கள். ஆனாலும் அவர்களால் தொடர்ந்து அதை மெயிண்டெயின் பண்ண முடியவில்லை. இந்த நிலையில், பிரியாணிக்குப் பிறகு தான் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் பாக்சர் வேடத்தில் நடிக்கும் பருத்தி வீரன் கார்த்தியும் அடுத்து சிக்ஸ்பேக்குக்கு மாறப்போகிறார்.
அதைக்கேட்டு, சிக்ஸ்பேக் வைத்தால் என்னோட ஹேன்ட்ஸம் போயிடும் என்று முன்பு சொன்னீர்களே? அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது அப்ப சொன்னேன். ஆனால் இப்ப இந்த கதைக்கு அப்படி நடித்தால் தான் சரியாக இருக்கும். மேலும், இன்றைய ரசிகர்கள் நடிகர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். சும்மா படத்துக்குப்படம் நாலு காமெடியை பேசி தள்ளிட்டெல்லாம் தொடர்ந்து சமாளித்து விட முடியாது. அவ்வப்போது வலுவான படங்கள்லயும் நடிக்கனும். பர்பாமென்ஸ் பண்ணனும். அப்பத்தான் ரசிகர்கள் நம்மளை உசரத்துல வச்சிருப்பாங்க. அதனால்தான், என்னோட ஹேன்ட்ஸம் பற்றி கவலைப்படாம, சிக்ஸ்பேக்குக்கு மாற முடிவெடுத்திருக்கிறேன் என்றாராம் கார்த்தி.