சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பெல்ரத்தின இயக்குனரின் சமுத்திரம் படத்துல பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தினாரு ஓயாத அலைகள் நாயகன். சமுத்திரம் ரிலீசாகுறதுக்கு முன்பே மூணு படங்கள்ல மகனை புக் பண்ணினாங்க. ஓகே சொன்ன ஓயாத அலைகள் நாயகன், எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதையும் போடலையாம். காரணம் படம் ரிலீசான பிறகு எந்த அளவுக்கு படம் ஹிட்டாகுதோ அந்த அளவுக்கு சம்பளத்தை கூட்டி கேக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காரு. ஆனா படம் எதிர்பாராம ஃபிளாப் ஆனதுல ஏற்கெனவே வாரிசை நடிக்க கேட்டு வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ போன்கூட பண்றதில்லயாம். ஓயாத அலைகள் நாயகனே போன் போட்டு பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ இல்லையாம். முதன் முதல்ல ஒப்பந்தம் போட வந்த "பயிற்சி யானை" பட டைரக்டர்கூட பின்வாங்கிட்டாராம். அதைத்தான் ஓயாத அலைகள் நாயகனுக்கு தாங்கிக் கொள்ள முடியலையாம். "முதல்லேயே எழுத்து பூர்வமா ஒப்பந்தம் போட்டிருந்தா இப்போ என் மகன் நடிச்சிக்கிட்டிருந்திருப்பான். வழக்கம்போல பேராசைப்பட்டு தப்பா பிளான் போட்டு மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டிங்களே" என்று வீட்டு தாய்குலம் தினம் புலம்பித் தீர்க்குறாங்களாம்.