மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பெல்ரத்தின இயக்குனரின் சமுத்திரம் படத்துல பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தினாரு ஓயாத அலைகள் நாயகன். சமுத்திரம் ரிலீசாகுறதுக்கு முன்பே மூணு படங்கள்ல மகனை புக் பண்ணினாங்க. ஓகே சொன்ன ஓயாத அலைகள் நாயகன், எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதையும் போடலையாம். காரணம் படம் ரிலீசான பிறகு எந்த அளவுக்கு படம் ஹிட்டாகுதோ அந்த அளவுக்கு சம்பளத்தை கூட்டி கேக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காரு. ஆனா படம் எதிர்பாராம ஃபிளாப் ஆனதுல ஏற்கெனவே வாரிசை நடிக்க கேட்டு வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ போன்கூட பண்றதில்லயாம். ஓயாத அலைகள் நாயகனே போன் போட்டு பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ இல்லையாம். முதன் முதல்ல ஒப்பந்தம் போட வந்த "பயிற்சி யானை" பட டைரக்டர்கூட பின்வாங்கிட்டாராம். அதைத்தான் ஓயாத அலைகள் நாயகனுக்கு தாங்கிக் கொள்ள முடியலையாம். "முதல்லேயே எழுத்து பூர்வமா ஒப்பந்தம் போட்டிருந்தா இப்போ என் மகன் நடிச்சிக்கிட்டிருந்திருப்பான். வழக்கம்போல பேராசைப்பட்டு தப்பா பிளான் போட்டு மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டிங்களே" என்று வீட்டு தாய்குலம் தினம் புலம்பித் தீர்க்குறாங்களாம்.