மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பெல்ரத்தின இயக்குனரின் சமுத்திரம் படத்துல பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தினாரு ஓயாத அலைகள் நாயகன். சமுத்திரம் ரிலீசாகுறதுக்கு முன்பே மூணு படங்கள்ல மகனை புக் பண்ணினாங்க. ஓகே சொன்ன ஓயாத அலைகள் நாயகன், எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதையும் போடலையாம். காரணம் படம் ரிலீசான பிறகு எந்த அளவுக்கு படம் ஹிட்டாகுதோ அந்த அளவுக்கு சம்பளத்தை கூட்டி கேக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காரு. ஆனா படம் எதிர்பாராம ஃபிளாப் ஆனதுல ஏற்கெனவே வாரிசை நடிக்க கேட்டு வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ போன்கூட பண்றதில்லயாம். ஓயாத அலைகள் நாயகனே போன் போட்டு பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ இல்லையாம். முதன் முதல்ல ஒப்பந்தம் போட வந்த "பயிற்சி யானை" பட டைரக்டர்கூட பின்வாங்கிட்டாராம். அதைத்தான் ஓயாத அலைகள் நாயகனுக்கு தாங்கிக் கொள்ள முடியலையாம். "முதல்லேயே எழுத்து பூர்வமா ஒப்பந்தம் போட்டிருந்தா இப்போ என் மகன் நடிச்சிக்கிட்டிருந்திருப்பான். வழக்கம்போல பேராசைப்பட்டு தப்பா பிளான் போட்டு மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டிங்களே" என்று வீட்டு தாய்குலம் தினம் புலம்பித் தீர்க்குறாங்களாம்.