அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கியவர் சற்குணம். இவர் பல மாதங்களாக தனுசுக்காக காத்திருந்து சமீபத்தில்தான் நய்யாண்டி என்ற தனது மூன்றாவது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இதில் கும்பகோணத்தில் குத்து விளக்கு செய்து விற்பனை செய்யும் இளைஞனாக நடிக்கிறார் தனுஷ். இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் இப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, அவருக்கு கனகச்சிதமான பொருந்தும் காதல் கலந்த காமெடி கதை என்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் செம ஜாலியான மூடில் நடித்து வருகிறாராம். இதனால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நகர்த்தி வருகிறாராம் சற்குணம்.
இப்படத்தில் நடித்து வருவது பற்றி தனுஷ் கூறுகையில், சற்குணம் இயக்கிய முந்தைய படங்களைப் பார்த்திருக்கிறேன். இரண்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதில் களவாணி பக்கா கமர்சியல் படம். அந்த மாதிரியான ஒரு கமர்சியல் பார்முலாவில்தான் இப்போது நய்யாண்டி படத்திற்கும் கதை பண்ணியுள்ளார். அவர் பண்ணியுள்ள காதல் மற்றும் காமெடி காட்சிகள் ரொம்ப இயல்பாக உள்ளது. காட்சிகளில் நடித்து விட்டு வீட்டுக்கு வந்தபிறகும் அந்த காட்சிகள் மனதிற்குள் நிழலாடுகின்றன. அந்த அளவுக்கு அற்புதமாக காட்சியமைத்திருக்கிறார் சற்குணம. சில இயக்குனர்களின் ஒரு படத்தில் நடித்த பிறகும் மீண்டும் அவர்கள் இயக்கத்தில் நடிக்கும் ஆசை ஏற்படாது. ஆனால் சற்குணத்தின் கதை இயக்கத்தை பார்க்கையில் மீண்டும் மீண்டும் அவர் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது என்கிறார் தனுஷ்.