தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் பானு. கேரளத்து வரவான இவரை முதல் படத்திலேயே பேச வைத்தார் ஹரி. அதனால் அதன்பிறகு தாமிரபரணி பானு என்றே திரையுலகத்தினரால் அழைக்கப்பட்டார். என்றாலும், அந்த சமயத்தில் தனது தந்தையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சினிமாவில் சரியானபடி கவனம் செலுத்த முடியாமல் கேரளாவிலேயே தங்கியிருந்தார் பானு. அதனால் அந்த சமயத்தில் தேடி வந்த படங்களில்கூட அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.ஆனால் பின்னர் பிரச்சினைகள் முடிந்த பிறகு பானு மீண்டும் வந்தபோது, அவரை திரையுலகத்தினர் மறந்தே போயிருந்தார்கள்.
இருப்பினும் அழகர்மலை, சட்டப்படி குற்றம் உள்பட சில படங்களில் நடித்தார். என்றாலும் நடிப்பு எடுபடவில்லை. இந்த நிலையில், தீவிர முயற்சியின் பலனாக இப்போது வஸந்த் இயக்கியுள்ள மூன்று பேர் மூன்று காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். நாகர்கோயில் தமிழ் பேசி நடிக்கும் பெண்ணாக வரும் பானுக்கு, வித்தியாசமான கதாபாத்திரமாம். தாமிரபரணி படம் போலவே பாவாடை தாவணியில் வந்து அசத்தியிருக்கிறாராம். இதனால் இந்த படத்துக்குப்பிறகு மீண்டும் கோடம்பாக்கத்தில் பிசியான நடிகையாகி விடுவேன் என்று கேரளாவை மறந்துவிட்டு சென்னை வாசியாகியிருக்கிறார் பானு.
மேலும், இப்போதெலலாம் கதாநாயகர்களை நம்பி எந்த புண்ணியமும் இல்லை. என்பதால் நான் உனக்கு சான்ஸ் வாங்கித்தருகிறேன் என்று ஆசை வார்த்தை சொன்ன ஹீரோக்களை நம்பாமல், முன்னணியில் இருக்கும் இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார் பானு. அதுமட்டுமின்றி, பானு என்ற பெயர் ரொம்ப பழசாக உள்ளது என்று இப்போது தனது பெயருக்கு முன்னால் முக்தாவை சேர்த்து முக்தாபானு என்று பெயரை புதுப்பித்திருக்கிறார் பானு.