தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியவர் எழில். அதையடுத்து பல படங்களை இயக்கிய அவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்திப்பறவை என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து இப்போது விமல்-பிந்துமாதவியை ஜோடி சேர்த்து தேசிங்குராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமலை எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்க வைத்திருப்பவர், பிந்துமாதவியை ரஜினி ரசிகையாக நடிக்க வைத்துள்ளாராம். ரசிகை என்றால் சாதாரண ரசிகை இல்லையாம். ரஜினி படம் வெளியாகும் முதல் நாள்அன்றே பார்த்தே ஆக வேண்டும் என்று துடிக்கிற ரசிகையாம். அதனால் தியேட்டர்களில் ரஜினி படம் பார்க்க அவர் மோதும் காட்சிகளும் உள்ளதாம்.
மேலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவ்வப்போது ரஜினி பாடல்களும் ஒலிப்பதோடு, வீட்டில் தனது அறை முழுக்க ரஜினி போட்டோக்களைத்தான் நிறைத்து வைத்திருப்பாராம் பிந்துமாதவி. அந்த காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டியும் நடித்துள்ளாராம். இதற்கு காரணம், ஏற்கனவே அவர் ரஜினியின் தீவிர ரசிகையாம். அதனால்தான் ரஜினி ரசிகையாக நடிக்க வேண்டும் என்றதும் படு உற்சாகமாக தேசிங்குராஜா படத்தில் கமிட்டானாராம் பிந்துமாதவி. மேலும், இவருக்கும் மற்ற எல்லா நடிகைகளையும் போல ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அப்படி கிடைக்கிற வாய்ப்பு ஒரு சில காட்சிகளில் வருவது போன்று இருந்தாலும் அதை தனது சினிமா கேரியரில் கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுவாராம் பிந்துமாதவி.