'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆந்திர சினிமாவில் சமந்தாவைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் வெளியாவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்னதான் அவர் மறுப்பு செய்திகள் கொடுத்தாலும் அதை யாரும் நம்புவதாக இல்லை. அதனால், இப்போது தன்னை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது தனியாக செல்வதை தவிர்த்து தனது அம்மாவை உடன் கூட்டிச்செல்கிறார் சமந்தா. அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் நடிகர்களுடன் ஜாலியாக கடலை போடுவது, அரட்டையடிப்பதையெல்லாம் ஏறக்கட்டி வருகிறார். நன்றாக பழகிய ஹீரோக்கள் நட்புடன் புன்னகைத்தால்கூட அதை கண்டும் காணாதவர்போல் முகத்தை திருப்பிக்கொள்கிறாராம். இதனால் சமந்தாவின் நட்பு வட்டார நடிகர்கள் இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
இதை அறிந்த அமலாபால், இதுதான் சரியான தருணம் என்று சமந்தா ஏறக்கட்டும் அத்தனை ஹீரோக்களையும் தன்பால் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். தானே வலிய அவர்களை தேடிச்சென்று நட்பை வளர்க்கும் அமலாபால், தனக்கு ஆதரவு தருமாறும் அன்பான வேண்டுகோள் வைக்கிறாராம். இதையடுத்து, சமந்தா மீது அதிருப்தியில் இருக்கும மேற்படி நடிகர்கள், அமலாபாலின் நட்பில் திருப்தி அடைந்து தங்களிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு அவரது பெயரை முன்வைக்கிறார்களாம். இதனால் தற்போது சத்தமில்லாமல அமலாபாலின் தெலுங்கு சினிமா மார்க்கெட் எகிறத் தொடங்கியிருப்பதோடு, அவரது படக்கூலியும் கண்டபடி எகிறி வருகிறதாம்.