தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சேதுவுக்குப்பிறகு விக்ரம் நடித்த பிதாமகன் படம் அவரை தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியாவுக்கும் கொண்டு சென்றது. ஆனால் அப்போது அவருக்கு இந்தி படங்களில் நடிக்க சரியான சந்தர்ப்பங்கள் எதுவும் அமையவில்லை. கடந்த ஆண்டுதான், டேவிட் என்ற படத்தில் நடித்தார். தமிழ், இந்தியில் வெளியான அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், விக்ரமின் நடிப்பு பேசப்பட்டது. குறிப்பாக அப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த நடிகை தபு, விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்று அங்குள்ள மீடியாக்களில் பெருமையாக சொல்லியிருக்கிறார். அதோடு, அவரெல்லாம் பாலிவுட்டுக்கு எப்போதோ வந்திருக்க வேண்டியவர். அப்படி வந்திருந்தால் இப்போதும் அவரும் இந்தியில் முன்னணி நடிகராக இருந்திருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் பாலிவுட் ஹீரோக்கள் தன்னை ஓரங்கட்டுவார்களே என்று அவர் அஞ்சவில்லை. மாறாக, தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று விக்ரமுக்கு அன்புக்கட்டளை போட்டுள்ள தபு, அங்குள்ள தனது அபிமானத்திற்குரிய டைரக்டர்களிடம் விக்ரமைப்பற்றி சொல்லி, அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதனால், தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வரும் விக்ரம், அப்படம் இந்தியிலும் வெளியாவதால், அதன்பிறகு தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் கலந்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.