பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
"தல" அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் (ஒர்க்கிங் டைட்டில்: வலை) நடித்து வருகிறார். இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, சுமா ரங்கநாத், கிஷோர், அதுல்குல்கர்னி, மகேஷ் மஞ்ரேக்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தில் சண்டைக் காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு 15 நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
எலும்பு முறிவு குணமாகிவிட்டாலும் அந்த விபத்தில் ஏற்பட்ட "தசை சிதைவு" குணமாகவில்லை. அதிக நேரம் நின்று கொண்டிருந்தாலோ, வேகமாக நடந்தாலோ கடுமையான வலி ஏற்படும். காலில் வீக்கம் ஏற்பட்டு விடும். அறுவை சிகிச்சை ஒன்றுதான் இதற்கு நிரந்தர தீர்வு என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியது வரும். இதனால் படப் பணிகள் அப்படியே நின்று போகும் என்பதுதான் அஜீத்தின் கவலை.
ஒரு காலத்தில் நம்பர் ஒன் தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்தினம் இப்போது பொருளாதார சிக்கலில் இருக்கிறார். அவருக்கு உதவும் நோக்கத்தில்தான் அஜீத் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். (ஏ.எம்.ரத்தினத்தால் பயன்பெற்றவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை) படம் தாமதமானால் வட்டிக்கு பணம் வாங்கி படம் தயாரிக்கும் ஏ.எம்.ரத்தினத்தின் நிலைமை மோசமாகி விடும். அதை மனதில் வைத்துக் கொண்டே வலியை பொறுத்துக் கொண்டும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அடுத்து அஜீத் நடிக்கப்போகும் படம், விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படம். விஜயா புரொடக்ஷன் நிறுவனர் நாகி ரெட்டியின் நூற்றாண்டையட்டி இந்தப் படத்தை அந்த நிறுவனம் பெருமையுடன் தயாரிக்கிறது. அதில் நடிக்க தாமதமானால் அவர்கள் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் படம் வெளிவரமுடியாமல் போய்விடும். ஒரு மாபெரும் நிறுவனம் தன்னால் தர்மசங்கடத்துக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக அந்தப் படத்தையும் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இரண்டு படங்களும் முடிந்த பிறகு அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அஜீத் சம்மதம் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் 21ந் தேதி அஜீத்தின் அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் நாள் குறித்து விட்டனர். அறுவை சிகிச்சை முடிந்து பூரணமாக குணமடைந்த பிறகுதான் அடுத்து நடிக்கும் படம் பற்றி அவர் அறிவிப்பார்.
அஜீத்தின் நல்ல குணமும், அவரது ரசிகர்களின் பிரார்த்தனையும் அவரை நிச்சயம் குணமாக்கும். இரண்டு படங்கள் முடியும் வரை அவருக்கு வேதனைகளை குறைக்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.