தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பேராண்மை படத்தில், ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வர்ஷா. அதன் பின், "நீர்ப்பறவை யில்இன்ஸ்பெக்டராக நடித்தவர், இப்போது, "என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில், "பனி விழும் மலர்வனம் படத்தில், வர்ஷாவுக்கு ஆக்ஷன் வேடமாம். ஒரு காட்சியில், புலியுடன் சண்டையெல்லாம் போடுகிறாராம். அதனால், "இனி, நானும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகை ஆகிவிடுவேன் என்கிறார் அவர். இருப்பினும், சமீபகாலமாக கிளாமர் என்பது கதாநாயகிகளுக்கு முக்கிய மூலதனமாக இருப்பதால், அடுத்தடுத்து, தான் கமிட்டாகும் படங்களில், கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கப் போவதாக சொல்லும் வர்ஷா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் செய்ய மாட்டாராம்.