ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தார்த்-சமந்தா இருவரும் காதலித்து வருவதாக நீண்டகாலமாக செய்திகள் புகைந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இருவர்தரப்பிலுமே அதற்கு மறுப்பு செய்திகளும் வாசிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், சிலதினங்களுக்கு முன்பு காளஹஸ்தி சிவன் கோயிலில் அவர்கள் பெற்றோர்களுடன் ஜோடியாக சென்று சாமி தரிசனம் செய்ததோடு, திருமணத்துக்கான ராகு-கேது பூஜைகளும் நடத்தியிருக்கிறார்கள். அதையடுத்து ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் இருந்திருக்கிறது. ஆனால் ராகு-கேது பூஜை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென்று சித்தார்த்தின் தந்தை மயங்கி விழுந்து விட்டாராம். இதனால் அபசகுணமாக கருதி திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
இதையடுத்து பூஜைகளைகூட அவசர அவசரமாக முடித்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். இந்த பரபரப்பு காரணமாக, அதுவரை ரகசியமாக நடைபெற்று வந்த பூஜைகள் விவரங்கள் கோயில் வளாகத்துக்குள் காட்டுத்தீயாய் பரவியிருக்கிறது. அதோடு திருமணம் நடந்து விட்டதாககூட கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சித்தார்த்-சமந்தாதரப்பை அணுகி கேட்டபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளனர். அதையடுத்து, இருவரும் சேர்ந்தே பரிகார பூஜை செய்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் திணறிய சித்தார்த், எனது சொந்த விசயங்களை ரொம்ப கிண்டி கிளறாதீர்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாகி விட்டாராம்.