12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
உதய் கிரணை நினைவிருக்கிறதா? தெலுங்கில் மிக வேகமாக வளர்ந்து வந்த ஹீரோ. அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வளர்ந்தவருக்கு சின்ன சறுக்கல் வந்தது. ஆந்திரத்து சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனாகும் வாய்ப்பை இவர் மறுத்ததால் தெலுங்கு சினிமா இவரை ஓரங்கட்டி வைத்தது. அதனால் தமிழில் வாய்ப்புத் தேட ஆரம்பித்தார். நீண்ட தேடலுக்குப் பிறகு பாலச்சந்தர் இயக்கிய "பொய்" படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் தோல்வி அடையவே மீண்டும் சறுக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு சில படங்களில் நடித்தார் எதுவும் சரியாக அமையவில்லை.
தற்போது நீண்ட இடைவெளிகுப் பிறகு உடம்பை ஸ்லிம் ஆக்கி, சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஆக்ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி ஆகிறார். தமிழில் ஃபிளையிங் கலர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சுதாகர் என்பவர் இயக்குகிறார். வினோத்குமார் இசை அமைக்கிறார். சதீஷ் முத்யாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து உதய்கிரண் கூறியதாவது: தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு டாப் ஹீரோவாக நான் வரவில்லை. அந்த ஏக்கம் எனக்கு உண்டு. காலம், சூழ்நிலை சரியாக அமையவில்லை ஒரு நாள் அமையும் என்று காத்திருந்தேன். அது இப்போது அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் வெற்றி பெறுவேன். அந்த வெற்றியை பாலச்சந்தர் சாரின் காலடியில் வைப்பேன். என்றார்.