ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது. "உரிய காலத்தில் தனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது காலம் தாழ்த்திய விருது" என்று அதனை வாங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தற்போது பின்னணி பாடகர் ஜேசுதாஸ் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: ஜானகி அம்மா மேல எனக்கு பெரிய மரியாதை உண்டு. சின்ன சின்ன ஆட்களுக்கு முன்னாடியே கொடுத்துட்டு நமக்கு தாமதமா தர்றாங்களே என்கிற அவுங்க கோபத்துல நியாயம் இருக்கு. ஆனால் அதை வெளிக்காட்டிக்காம விருதை வாங்கியிருக்கணும். ஏன்னா பெரிய ராஜ்யத்திலேருந்து கிடைக்கும் கவுரவமான விருது.
நான் 7 முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கேன். எனக்கு அதோட விதிமுறைகள் தெரியும். விருதுக்கு தேர்வான பிறகு உங்களுக்கு இதை வாங்கிக்க சம்மதமான்னு கேட்பாங்க. அப்படி ஜானகி அம்மாகிட்டேயும் நிச்சயம் கேட்டிருப்பாங்க அப்பவே மறுத்திருக்கலாம். நாம் பாட வரும்போது அவார்ட் கொடுப்பாங்கன்னு பாட வரலை. தட்சிணாமூர்த்தி சாமிக்கு 94 வயசாகுது. இசையில் பெரிய ஜாம்பவான், மேதை அவருக்கு ஒரு அவார்ட்கூட கொடுக்கல. அதற்காக அவரது திறமைய யாராவது குறைச்சி மதிப்பிட முடியுமா.
இவ்வாறு ஜேசுதாஸ் கூறியுள்ளார்.