குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
ஆதி, டாப்சி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள, புதிய தெலுங்கு படம், ஆந்திராவில் வெளியாகி, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்த படத்தின், பாடல்கள் ஹிட்டாகி, "சிடி விற்பனையில், பிளாட்டினம் டிஸ்க் பெற்றுள்ளது.இது தொடர்பான விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, இளையராஜா பேசுகையில்,"இந்த படத்தின் பாடல்களுக்கான இசையும், பின்னணி இசையும், நேரடியாக இசைக் கலைஞர்களை வைத்து, லைவாக, செய்யப்பட்டவை. சமீபத்தில் வெளிநாட்டில் நான், இசைக் கச்சேரியை நடத்தினேன். ஏராளமான இசைக் கலைஞர்கள், நேரடியாக பங்கேற்று, இசைக் கருவிகளை இசைத்தனர். ஆனால், இனிமேல், இசைக் கலைஞர்களை வைத்து, இதுபோன்ற கச்சேரியை யாரும் நடத்தப் போவது இல்லை. இயந்திரங்களுக்கு தான், இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.