வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஆதி, டாப்சி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள, புதிய தெலுங்கு படம், ஆந்திராவில் வெளியாகி, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்த படத்தின், பாடல்கள் ஹிட்டாகி, "சிடி விற்பனையில், பிளாட்டினம் டிஸ்க் பெற்றுள்ளது.இது தொடர்பான விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, இளையராஜா பேசுகையில்,"இந்த படத்தின் பாடல்களுக்கான இசையும், பின்னணி இசையும், நேரடியாக இசைக் கலைஞர்களை வைத்து, லைவாக, செய்யப்பட்டவை. சமீபத்தில் வெளிநாட்டில் நான், இசைக் கச்சேரியை நடத்தினேன். ஏராளமான இசைக் கலைஞர்கள், நேரடியாக பங்கேற்று, இசைக் கருவிகளை இசைத்தனர். ஆனால், இனிமேல், இசைக் கலைஞர்களை வைத்து, இதுபோன்ற கச்சேரியை யாரும் நடத்தப் போவது இல்லை. இயந்திரங்களுக்கு தான், இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.