'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆதி, டாப்சி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள, புதிய தெலுங்கு படம், ஆந்திராவில் வெளியாகி, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்த படத்தின், பாடல்கள் ஹிட்டாகி, "சிடி விற்பனையில், பிளாட்டினம் டிஸ்க் பெற்றுள்ளது.இது தொடர்பான விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, இளையராஜா பேசுகையில்,"இந்த படத்தின் பாடல்களுக்கான இசையும், பின்னணி இசையும், நேரடியாக இசைக் கலைஞர்களை வைத்து, லைவாக, செய்யப்பட்டவை. சமீபத்தில் வெளிநாட்டில் நான், இசைக் கச்சேரியை நடத்தினேன். ஏராளமான இசைக் கலைஞர்கள், நேரடியாக பங்கேற்று, இசைக் கருவிகளை இசைத்தனர். ஆனால், இனிமேல், இசைக் கலைஞர்களை வைத்து, இதுபோன்ற கச்சேரியை யாரும் நடத்தப் போவது இல்லை. இயந்திரங்களுக்கு தான், இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.