இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி வாய்மை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் பைனான்ஸ் பிரச்னைகள் தீர்ந்து ஆக்சன் சொல்ல தயாராகியிருக்கிறார் இயக்குனர் செந்தில். இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுண்டமணி இருக்கிறார் என்ற செய்தியை கேள்விபட்டு, சிம்பு, விஷால் உள்பட பல நடிகர்கள் அவரை தேடிச்சென்று சந்தித்தார்களாம். முன்பு போலவே தன்னை சந்திக்க வந்தவர்களிடம் காமெடியாக பேசிக்கொண்டிருந்தாராம் கவுண்டர். அதனால் பத்து நிமிசத்தில் பேசிவிட்டு வந்து விடலாம் என்று சென்றவர்கள்கூட மணிக்கணக்கில் கவுண்டரின் காமெடி பேச்சை தன்னை மறந்து ரசித்திருக்கிறார்கள்.
ஆனால் அப்படி தன்னை சந்திக்க வந்தவர்கள் ஒருவரிடம்கூட எனக்கு உங்கள் படங்களில் சான்ஸ் கொடுங்கள் என்று அவர் கேட்கவில்லையாம். எங்கள் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னபோதுகூட, உங்களுக்கு என் தயவு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள். ஆனால் கவுண்டமணி படமே இல்லாமல் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று என் மீது பரிவு கொண்டு யாரும் சான்ஸ் தர வேண்டாம். அது எனக்கு பிடிக்காது என்று நெத்தியடியாக சொன்னாராம் கவுண்டர்.