இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த,"வெண்ணிலா கபடிக் குழு என்ற படம், பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து, விஷ்ணுவுக்கு பல படங்கள் கிடைத்தன. ஆனால், சரண்யா மோகனுக்கு தான் பெரிதாக படங்கள் கமிட்டாகவில்லை. இந்நிலையில், "வெண்ணிலா கபடிக்குழு படத்தை,"பாதல்பூர் பாய்ஸ் என்ற பெயரில், இந்தியில் ரீ-மேக் செய்யும் முயற்சி தற்போது நடக்கிறது. இதில், "டேவிட் படத்தில் விக்ரமின் நண்பனாக நடித்த, நிஸான் நாயகனாக நடிக்க, தமிழில் நடித்த சரண்யா மோகனே நாயகியாக நடிக்கிறாராம். இந்தியில், தான் நடிக்கும் முதல் படம் என்பதால், உற்சாகத்தில் இருக்கிறார் சரண்யா.இதுகுறித்து சரண்யா,"தமிழில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு, மண்வாசனையுடன் படமாக்கப்பட்டது. இதன், இந்தி பதிப்பில்,கமர்சியலான சில விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தி படத்தில் நடிப்பது, புது அனுபவமாக உள்ளது என்கிறார்.