இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இலங்கை தமிழர் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கல்லூரி மாணவர்கள் என ஒவ்வொருவராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சினிமா துறையினரும் களம் இறங்க உள்ளனர். ஏற்கனவே பெப்சி அமைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இப்போது இயக்குனர் சங்கமும் போராட்டத்தில் இறங்குகிறது.
இதுதொடர்பாக இயக்குனர் சங்க பொது செயலாளர் அமீர் கூறுகையில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க சொல்லி வலியுறுத்தியும், ராஜபக்ஷேயை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி வருகிற மார்ச் 19ம் தேதி இயக்குனர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.