இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு தெலுங்கில் "கொண்டேலு கோதாவரி" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். கடந்த 8ந் தேதி வெளிவந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தமிழ் நாட்டைச் சேர்ந்த குமார் என்பவர் இயக்கி உள்ளார். ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு, சந்தீப் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் தெலுங்கில் ஹிட்டானது. இதன் பாடல் சிடிக்கள் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி உள்ளது. இதற்கான பிளாட்டினம் டிஸ்க்கை பெற்றுள்ளது. இதனை லட்சுமி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் இளையராஜாவிடம் வழங்கினர்.
பின்னர் இளையராஜா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் லைவ் மியூசிக் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இசை கலைஞர்களைவிட இசை கருவிகளை கொண்டே இசை அமைக்கப்பட்டு வருகிறது. லைவ் மியூசிக் எனக்கு பிறகு யாரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லாஸ் ஏஞ்சல்சில் நான் நடத்திய கச்சேரியில் நூற்றுக் கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்றார்கள். இனி இதுபோன்ற கச்சேரியை நீங்கள் கேட்க முடியாது. காரணம் இனி இசை கலைஞர்களை கொண்டு யாரும் கச்சேரி நடத்த மாட்டார்கள். இதுதான் கடைசி கச்சேரி என்றேன். ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள், இசைதான் மாறியிருக்கிறது. என்றார்.