ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது 5 படங்களில் பிஸியாக நடித்து வருவதால் குஷியுடன் இருக்கிறார் நடிகை நயன்தாரா. ஸ்ரீராம ராஜ்ஜியம் தெலுங்கு படம் முடிந்ததும் கண்ணீரோடு விடைபெற்று சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக உறுதி செய்தார் நயன்தாரா. அதன் பிறகு அவர் எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையாததால் மீண்டும் திரையுலகில் கால் பதித்தார்.
யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நயன்தாராவை தமிழ் திரையுலகம் வரவேற்றது. ரசிகர்களும் நயன்தாராவின் வரவை ஆதரித்தனர். அதன் விளைவாக தற்போது அஜீத் ஜோடியாக வலை, ஆர்யா ஜோடியாக ராஜாராணி, உதயநிதியுடன் கதிர்வேலன் காதலி படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் கஹானி இந்திப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், நான் நடித்த 5 படங்கள் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது. இதற்கெல்லாம் கடவுள் அருள்தான் காரணம். நான் கடுமையாக உழைக்கிறேன். பலனை கடவுளிடம் விட்டு விடுகிறேன். படங்கள் வெற்றி பெறுவதற்கு யாரும் உத்தர வாதம் அளிக்க முடியாது. ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமாக வருகின்றன. இந்த படம்தான் வெற்றி பெறும் என்று உறுதியாக கணிக்க முடியாது, என்றார்.