துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
பரதேசி படத்தின் ட்ரெய்லரில் மாட்டை அடிப்பது போல் டைரக்டர் பாலா நடிகர்களை அடித்து நொறுக்கியதைப்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிதாமகன் படத்தில் நடத்த நடிகர் ஒருவர் கூட தான் நடித்தபோதுகூட இப்படித்தான் பல அடிகளை வாங்கியிருக்கிறேன் என்று புலம்பும் அவர், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக சிந்தனைகயாளர்களிடம் இதுபற்றி பேசி, இந்த பிரச்சினையை முடிவு கட்டலாமே என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம்.
ஆனால் இதையறிந்த சிம்புவோ, சினிமாவுக்கு சம்பந்தமில்லாத நபர்கள்தான் அதை உண்மை என்று நம்புகிறார்கள் என்றால், சினிமாக்காரர்களுமே அதை நம்புவதுதான் வேடிக்கையாக உள்ளது என்கிறார். அந்த ட்ரெய்லரை நானும்தான் பார்த்தேன். பாலா பயன்படுத்தியிருப்பது சினிமாவில் சண்டை காட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆபத்தில்லாத குச்சிகள்தான். அதைக்கொண்டு அடித்தால் வெறும் சத்தம் மட்டும்தான் வரும். ஆனால் யாருக்கும் வலிக்காது. ஆனால் இந்த உண்மை தெரிந்தும்கூட டைரக்டர் பாலாவை சினிமாக்காரர்களே திட்டித்தீர்ப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இப்படி சாதகமாகவும், பாதகமாகவும் கருத்துக்கள் நிலவிக்கொண்டிருக்க எந்த ஸ்டேட்மெண்டும் விடாமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஆனால், படம் திரைக்கு வருகிற சில நாட்களுக்கு முன்பு இப்படியொரு ட்ரெய்லரை வெளியிட்டு பரபரப்பு கூட்டியிருப்பதன் காரணம், ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான் என்கிறார்கள் சிலர். பிதாமகனுக்குப்பிறகு அவர் இயக்கிய படங்கள் ஓடாததால் இந்த படத்தை எப்படியும் ஓட வைத்து விட வேண்டும் என்பதற்காகவே கடைசி நேரத்தில் இப்படி அதிரடியான விளம்பரங்களை அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.