வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
"வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி ஆகிய படங்களில், யதார்த்தமான கிராமத்து பெண் வேடத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார், இனியா. ஆனாலும், கோலிவுட், அவர் மீது, பாராமுகம் காட்டியது. இதனால், அதிருப்தியில் இருந்த இனியாவுக்கு, இப்போது, அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் வகையிலான, செமத்தியான கேரக்டர் கிடைத்துள்ளதாம்."மாசாணி என்ற த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார், இனியா.
இந்த பட அனுபவம் குறித்து, அவர் அளித்துள்ள பேட்டியில், "மலையாளப் படங்களில் பிசியாக இருந்தபோது, இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தனர். தேதி இல்லாவிட்டாலும், இந்த படத்தின் கதை முழுவதும், என்னைச் சுற்றியே வரும் வகையில், அமைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். புயல், மழை, மின்னல், நடுங்க வைக்கும் காட்சிகளில் நடித்தது, புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெளியானதும், என் தமிழ் திரையுலக பயணம், சுகமான அனுபவமாக இருக்கும் என, கூறியுள்ளார், இனியா.