புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள், அவர்களை பரந்தமனம் இல்லாத சின்ன புத்திக்காரர்கள் மட்டுமே மட்டம் தட்டுகிறார்கள், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண்களால் எல்லாவற்றிலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்தவர்களாக முடியும். ஆனாலும் சின்ன புத்தி கொண்டவர்கள், பரந்த மனம் இல்லாதவர்கள் அவர்களை பின்னுக்கு இழுக்கிறார்கள். அவற்றை வென்றெடுத்து சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியும். சிறந்த குடும்ப தலைவியாக இருக்க முடியும்.
சாதிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக நான் சாதித்திருக்கிறேன். நான் செய்யும் நற்பணிகள்பற்றியோ மக்களுக்காக செய்வதுபற்றியோ கூற வரவில்லை. என்னுடைய வேலையை குறிப்பிட்டு சொல்கிறேன். எங்களுக்குள்ள இமேஜ் அல்லது கவர்ச்சியாலோ மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம். ஆனால் இதையெல்லாம்விட அதிகம் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் பெண்களின் அவசியத்தை எல்லா துறையிலும் உணர்ந்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.